Saturday, April 13, 2013

நீளம் , அகலம் பலன்களின் தொடர்ச்சி

41'அடி 
தொழில் சிறப்பாக நடந்து பொன்,பொருள் மிகும் .கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும் .

42'அடி 
சகல சுகபோகங்களும் அனுபவிக்கலாம் . இல்லாமையே இருக்காது .அன்பு நடமாடும் கலைக்கூடமாக குடும்பம் இருக்கும் .வாழ்வில் சகலமும் கிடைக்கும் .

43'அடி 
தடை தடையின்றி வந்துகொண்டே இருக்கும் .எதிலும் ஏமாற்றம் கிடைக்கும் . ஒரு அடி உயர்ந்தால் பல அடி சறுக்கும் .

44'அடி 
நோய்களுக்கு கொண்டாட்டம் தான் .கண்களுக்கு பாதிப்பு ஏற்ப்படும் .ஏக்கம் தான் மிஞ்சும் .துன்பமும் துயரமும் போட்டிபோடும் .

45'அடி 
மிகுந்த பொருள் கிடைக்கும் . புகழ் பெருகும் நன்மைகள் கிடைக்கும் .

46'அடி 
காரியங்கள் நிறைவடையாது ,வறுமை குடி புகும் எந்த பெரிய காரியமும் செய்யமுடியாது வேதனை மிகும் .

47'அடி  
சேமித்த பொருள் செலவழிந்து போகும் .வரவு தடைபடும் .கடன் சுமை ஏறும் . கவலைதரும் .

48' அடி 
பகைவர்கள் துன்பத்தை உண்டாக்குவார்கள் .தீ விபத்து நடக்கும், விபத்து தரும், வறுமை மிகும் .

49' அடி 
திருட்டு நடக்கும் .அவமானங்களை எதிர்கொள்ள நேரிடும் .அரசாங்க பகை தண்டனை உண்டாகும் .

50'அடி 
உற்றார் உறவினர்களின் தொல்லை தாங்க முடியாது ,காரியங்கள் அப்படியே நிற்கும் .

51'அடி 
 நிலை உருவாகும் துன்பம் தொல்லை ஏற்படும் 

52'அடி
விவசாயம் லாபம் தரும் மகசூல் சிறப்பாக இருக்கும் எடுக்கிற முயற்ச்சிகள் வெற்றி அடையும் .

53'அடி   
தீய நடத்தையுடைய பெண்களின் தொடர்புகள் ஏற்படும் பெண்களால் அவிமானமும் , பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் . 

54'அடி
அரசாங்க தண்டனை கிடைக்கும் . 

55'அடி             
சுற்றத்தாரிடம் பகைமையும் சண்டை சச்சரவுகளும் ஏற்படும் .

56'அடி
ஏழு  தலைமுறைக்கும் நலம் விலையும் பெருமையும் புகழும் நிரந்தரமாகவும் அனைத்து நன்மைகளும் நடக்கும் . 

57'அடி
புத்திர தோஷம் உண்டாகும் , வாழ்க்கை துணையுடன் மோதல் ஏற்பட்டு பிரிவு உண்டாகும் .

58'அடி
எதிர்பாராத செலவுகள் இழப்புகள் ஏற்படும் , துயரமும் துன்பமும் நிரந்தரமாகவும் . 

59'அடி
கஷ்டப்பட்டு சேர்த்த பொருட்கள்  தீய வழியில் காணாமல் போகும் . எதுவுமே நடக்காமல் ஏக்கம் தான் மிஞ்சும் . 

60'அடி
தொழில் சிறப்பாக நடக்கும் , திரவியங்கள் சேரும் செல்வம் பெருகும் , தொட்டதெல்லாம் துலங்கி நன்மைகள் சேரும் . 

61'அடி
கலவரம் உண்டாகும் , அமைதி இருக்காது , பிறரிடம் அடிமையாக இருக்க நேரிடும் . 

62'அடி
வறுமை , வாட்டம், வருத்தம் இதுவே சொந்தமாகும் . 


63'அடி
பொன் பொருள் விருத்தி அடையும் போற்றதக்க வாழ்வு அமையும் . துறவிகள் அருளாசி , நல்லோர்கள் ஆதரவு கிடைக்கும் .

64'அடி
அரசு உதவி அரசாங்க ஆதரவு உண்டாகும் . பரிசு கிடைக்கும் , பட்டங்கள் பதவிகள் தேடிவரும் .  புகழ்  மிகும் , பூரண மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடக்கும் .

65'அடி
இல்லற வாழ்வு கசக்கும் , வாழ்க்கை துணையுடன் அன்பு பரிமாற்றம் இருக்காது . பிரச்சனைகள் உருவாக்கி மனைவி பிரிந்து செல்வாள் .

66'அடி 
எல்லா நன்மைகளும் ஒருங்கே சேர்ந்து விளங்கும் . மன அமைதி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் . நல்ல புத்திரர்கள் உண்டாவர்கள் . பொன் பொருள் விருத்தி ஏற்படும் , புகழ் பரவும் .

67'அடி 
திருடர்களால் தொந்தரவு ஏற்படும் . தீய சக்திகள் குடியேறும் , பேய் பிசாசுகள் தாண்டவமாடும் , வஞ்சகர் துன்பங்களை தருவர் . 

68'அடி 
நினைத்த காரியம் நடக்கும் , எதிர்பாராமல் பொருள் வரவு ஏற்படும் , துறவிகள் தொடர்பு ஆன்மீகவாதிகள் ஆதரவு கிடைக்கும் . 

69'அடி 
செல்வம் சிதிலமடையும் , புகழ் சேதாரமாகும் , தீயால் பாதிப்பு உண்டாகும் . தீயோரால் துன்பம் ஏற்படும் .

70'அடி 
சென்ற இடமெல்லாம் சிறப்பும் மரியாதையும் உண்டாகும் . செல்வம் தாராளமாக வந்து சேரும் , தொண்டு செய்து புகழ் பெறலாம் . 

72'அடி 
அனைத்து செல்வங்களும் சேரும் ஆடம்பர வாழ்வு கிடைக்கும் .

73'அடி
வம்ச விருத்தி தடைபடும் , சுற்றத்தாருக்கு செலவழித்து ஏழையாக நேரிடும் . புகழ் மற்றும் பொருள்
விரயம் ஆகும் . 

74'அடி
பரிசு பட்டம் பதவி கிடைக்கும் . பலரும் பாராட்டுவார்கள் , பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் .்

75'அடி 
கெட்ட பெயர் ஏற்ப்படும் . சேமிப்புகள் காலியாகும் . அருங்குணம் மாறும் , அன்பு மனதில் இருந்து வெளியேறும் . அல்லல்கள் சேரும் . 

76'அடி
எதிரிகளாலும் நண்பர்களாலும் தீமை விளையும் . எவர் உதவியும் கிடைக்காது . கொடியவர்களின் அச்சுறுத்தல்கள் இருக்கும் . பயமே வாழ்க்கை முழுவதும் இருக்கும் . 

77'அடி 
எவ்வளவு பிரச்சனைகளையும் சமாளிக்கும் திறமை உண்டாகும் . தேவையான பொருள் கிடைக்கும் . செல்வ செழிப்பு உண்டாகும் . 

78'அடி 
வாரிசுக்கு தீங்கு உண்டாகும் . எதிர்காலம் சூன்யமாகும் அவமானங்களை அடைய நேரிடும் . இன்னல்கள் உருவாகும் . 

79'அடி 
கால்நடை விருத்தியாகும் , பால் தொழில் நன்மை தரும் . பண்ணை தொழில் சிறப்பாக இருக்கும் . எல்லோரும் பாராட்டும் தன்மை ஏற்படும் . 

80'அடி 
யோகம் நிறைந்த மகிழ்வான வாழ்வு உண்டாகும் . சுகபோக வாழ்வு கிடைக்கும் . மங்கையர் உறவு நன்மை பயக்கும் . சொகுசான வாழ்வு அமையும் . 




No comments: