Monday, March 25, 2013

மனையடி சாஸ்திரத்தில் உள்ள நீளம், அகலம் பற்றிய விளக்கமும் பலன்களும்

மனையடி சாஸ்திரத்தில் உள்ள நீளம், அகலம் பற்றிய விளக்கமும் பலன்களும் 

மனையடி சாஸ்திரத்தில் மக்கள் அதிகமாக நம்புவது நீளம் மற்றும் அகலத்தின் பலன்களை ஆனால், இது வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு தொடர்பில்லாத ஒன்று.


மனையடி சாஸ்திரத்தில் உள்ள நீள அகலம் என்பது 'அடி' (feet) கணக்கீடில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இந்த 'அடி'  (feet) கணக்கீடு ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு வந்தபோது அவர்கள் நாட்டில் பின்பற்ற பட்ட இந்த கணக்கீட்டை  நம் நாட்டிலும் பயன்படுத்தினர் .இந்த அளவீட்டு முறைதான் பரவலாக நடைமுறையில் உள்ளது. ஆனால் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பாகவே நமது முன்னோர்கள் எந்தெந்த ஜாதியினர் எந்தெந்த மரத்தின் குச்சிகளை  கொண்டு முழக்கோல் தயார் செய்து அளக்கவேண்டும் என்றும் . வேறொரு முறையான அந்த மனையின் குடும்ப தலைவரின் கால் பாதம் , முழங்கை அளவு போன்றவை இதில் பயன்படுத்த பட்டதாக கூறப்படுகிறது . 

இதில் எப்படி நமது முன்னோர்கள் சொல்லிவைத்து சென்றதாக கூறப்படும் நீள அகலத்தின் பலன்கள்,  இந்த பலன்கள் எப்படி 'அடி' கணக்கீட்டோடு இணைந்தது ?.

இந்த அளவு முறைகளை சில ஊர்களில்  கட்டிடத்தின் உள் பகுதிகளில் மட்டும் பார்க்கப்படுவது உண்டு சில  ஊர்களில் கட்டிடத்தின் வெளிப்பகுதிகளில் மட்டும் பார்ப்பவர்களும் உண்டு. எவ்வளுவுதான் ஆதாரத்துடன் நாம் விளக்கங்கள் கூறினாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு நீள அகலத்தின் பலன்களை கூறுங்கள் என்பவர்களுக்கு இந்த பலன்கள் .

 6 ' அடி
இறைவனின் அருள் சேரும் , குல தெய்வ வழிபாடு சிறப்பாகும் .பொன், பொருள்,யோகம் உண்டாகும். இலட்சுமி கடாட்சம் உண்டு .


 7 ' அடி
வறுமை தாண்டவமாடும் ,நோய் வரும் .வரவுக்குமேல் செலவு வரும். தரித்திரம் விருப்பமுடன் குடியேறும் , கடன் மிகும் பிச்சை எடுக்கும் நிலைமை வரும் ,இலட்சுமியை தேடவேண்டிய நிலை வரும்.


 8 ' அடி
இலட்சுமி தானாக வருவாள். செல்வம் கொழிக்கும். தெய்வபார்வை கிட்டும்.வாழ்வில் முன்னேற்றம் ஏற்ப்படும். படிப்படியாக அனைத்து இன்பமும் வந்து சேரும் பதவி கிடைக்கும்.பிறரை அதிகாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் . நல்ல ஆட்கள் கிடைப்பார்கள் . அந்தஸ்து உயரும் .


 9 ' அடி
தோல்விகள் தொடர்கதையாகும் . காரணம் தெரியாமல் துன்பம் வரும் . துணைவரோடு பிணக்கு ஏற்ப்படும் . தரித்திரம் நடனம் புரியும் .


 10 '  அடி
அறுசுவை உணவு உண்ணலாம். ஆடம்பரமான ஆடை அணியலாம் திருமகள் அருள் பெறலாம். எதிர்பாராத பொருள் வரவு உண்டு எதற்காகவும் யாரிடமும் செல்லவேண்டியிராது .

 11 ' அடி
எந்த காரியமும் துணிந்து செய்யலாம். வெற்றியை தவிர வேறு எதையும் பெற முடியாது . கால்நடை செல்வங்கள் சிறப்புதரும். செழிப்பான வாழ்க்கையை தரும் .

 12 ' அடி
எதிர்பாராத துர்மரணங்கள் உண்டாகும் . எந்த காரியமும் வெற்றிபெறாது .முழுத்தகுதி இருந்தாலும் வேலை கிடைக்காது . நினைத்து பார்க்கமுடியாத வகையில் காரியங்கள் தோற்கும் ஏழ்மையின் எல்லையை காணநேரும் . புத்திரர் இழப்பு உண்டாகும் . வறுமை மனம் விட்டு சிரிக்கும் .


 13 ' அடி
தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்கமுடியாது . விதம் விதமாய் துயரங்கள் வந்து தாக்கும் . நோய் நட்புகொள்ளும் வருவாய் காணமல் போகும் .


 14 ' அடி
கவலை தொடர்ந்து முகாம் இடும் . அந்நியரால் இடைஞ்சல் ஏற்படும் எந்த நேரமும் ஆபத்து வரும் .ஏக்கம் வரும் தூக்கம் வராது .


 15 ' அடி
வறுமை சூழ்ந்து கொள்ளும் இல்லாமை இருக்கும் . எதுரிகளினால் துன்பம் துயரம் ஏற்படும் மனை வருத்தம் மிகும் .


 16 ' அடி
மகிழ்ச்சி கூத்தாடும் பொருள் மலை போல் பெருகும் .புகழ் தேடி ஓடிவரும் . செல்வம் சேரும் .

 17 ' அடி
வெற்றிமீது வெற்றி வந்து சேரும் .போட்டியாளர் வந்து பணிவர் . எடுக்கும் காரியம் தானாக ஜெயமாகும் .தொழில் சிறப்பாக நடக்கும் .


 18 ' அடி
திருடர்களாலும் , மற்றவர்களாலும் பொன்பொருளுக்கு ஆபத்து நேரும் . செலவுகள் கட்டுகடங்காமல் போகும் . கட்டிடம் இடிய நேரலாம் மனவேதனைகள் பெருகும் .

 19 ' அடி
இல்லாமை இருந்து கொண்டே இருக்கும் . புத்திரர்களால் கவலை உண்டாகும் . நம்முடன் கவலையும் சோகமும் குடியேறும் .

 20 ' அடி
தொழில் தடையின்றி நடக்கும் . இலாபம் குறைவின்றி கிடைக்கும் வருமானம்  பெருகி சொகுசான வாழ்வு கிடைக்கும் .

No comments: