21' அடி
எங்கெங்கும் வெற்றியாகவே இருக்கும் . தொட்டதெல்லாம் பொன்னாகும் . இல்லத்தில் மகிழ்ச்சி கூத்தாடும் .
22 ' அடி
குறை சொல்லமுடியாத வாழ்வு அமையும் .எதிரிகள் தோல்வி அடைவர் .கெளரவம் பெருகும் .யாருக்கும் பணிந்து செல்லவேண்டிய அவசியம் இருக்காது .
23 ' அடி
உயரமுயற்சிதால் முடியாது .உறவு பகை ஏற்படும் . அமைதி தேடினாலும் கிடைக்காது . துன்பம் துயரம் பெருகும் .
24 ' அடி
சேமிப்பு கரையும் . கவலைகள் பெருகும் . முயற்சிக்கேற்ற வெற்றியும் உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்காது .எடுத்த காரியம் பாதியிலேயே நின்று போகும் .
25 ' அடி
இல்லறம் நல்லறம் ஆகாது . துணைவரால் துன்பம் நேரிடும் . அவமானம் நேரிடும் . பிரிவு தரும் .
26 ' அடி
பொன்மகள் தேடி வருவாள் . பொருள் செழிக்கும் . யோகம் பெருகும் . வாழ்வில் இன்பம் நிறைந்து இருக்கும் .
27 ' அடி
தகுதிக்கு ஏற்ப பதவி கிடைக்கும் .பதவி உயர்வு உண்டாகும் .நல்ல மனிதர்களின் தொடர்பும் உதவியும் கிடைக்கும் . பெயரும் புகழும் சிறப்பாக இருக்கும் .
28 ' அடி
இதுவரை இருந்த வேதனைகள் கதிரவனை கண்ட பனிபோல் விலகும் . வெற்றி கிட்ட ஆரம்பிக்கும் . தோல்விக்கு மூடு விழா நடக்கும் .எல்லோரும் நட்பு கொண்டாடுவர் .தெய்வ கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் .
29 'அடி
கால்நடை, விவசாயம் விருத்தியாகும் . உயர்வான அந்தஸ்து கிடைக்கும் . வாழ்க்கை வளம்பெறும் .
30 ' அடி
அஷ்ட்ட லெட்சுமி கடாட்சம் கிடைக்கும் . சந்தானம் பெருகும் .பூர்வீக சொத்து கிடைக்கும் , யோகம் நிரந்தரமாகும் .
No comments:
Post a Comment